
அன்பே உனைக் கனவில்
கண்டேனே உயிராக
கண்டேனே உயிராக
அழகே உனை கண்ணில்
கொண்டேனே கரு மணியாக
கொண்டேனே கரு மணியாக
அறிவே உனை கவிதை செய்தேனே
ஒரு சொல்லாலே
ஒரு சொல்லாலே
அடடா எனை மறந்தே போனேனே
உன் நினைவாலே
உன் நினைவாலே
அளவோடு நீ பேசிய போதும்
அடங்காமல் நான் ஏசிய போதும்
பூவாக நீ வீசியதாலே புதிதாய் பிறந்தேனே
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
என் வாழ்க்கை தேனாய் மாறும்
குழந்தை போல் உன்னைத் தாங்கி
இன்பம் தருவேனே
காயம் கொள்கிற போது உன்
கண்கள் தீண்டிட வேண்டும்
காயம் என்பது மாயமாகுமே உன்
கைகள் சேர்த்திட்டால் போதும்
இமயம் தொடுகிற போதும் உன்
மையம் தன்னிலே இருப்பேன்
உன்னை நீங்கி நான் என்ன செய்துதான்
ஆவதென்ன என்னெஞ்சே
உன்னோடு வாழ்கின்ற நொடிதோறும் ஆனந்தம்
நீயின்றி நடக்கின்ற அடிகூட பூகம்பம்
கண்ணே என் கண்ணே
நீ என்னில் உறைவாயா?
நேரில் பார்க்கிற போது என்
கண்கள் மலருதே பாரு
இந்த நேரத்தில் இவரைச் சந்தியென
சொல்லிச் சென்றது யாரு?
உன்னை மட்டுமே எண்ணி
காதல் வளருதே என்னில்
யாரென்ன தான் சொன்ன போதிலும்
திரும்ப மறுக்கிறேன் அன்பே
பூவோடு சேர்கின்ற நாரிங்கு மணக்காதா?
உன்னோடு வாழ்கின்ற காலம்தான் வாய்க்காதா?
கண்ணே என் கண்ணே
என் கண்ணீர் துடைப்பாயா?
காதல் என்பது வேறு
நட்பு என்பது வேறு
நட்பு காதலாய் மாறக் கூடுமே
காதல் மாறுமா நட்பாய்?
காதல் நட்பிலே வாழும் நம்
காலம் முழுமையும் நிலைக்கும்
நட்பில் காதல்தான் வாழக் கூடுமா?
அது நம் வாழ்வில் தகுமா?
அடிநெஞ்சில் சேமிக்கும் என் காதல் எல்லாமே
நீ வந்து செலவாக்கும் வரம் வேண்டும் என் அன்பே
பொடியா நான் சொன்னால்
நீ சரிதான் என்பாயா?