Tuesday, January 4, 2011

76 - saaral ean? eeram

காதல் ஏன் அது ஏன் 
என் கனவைத் தின்கிறது? 
சாதல் ஏன் அது ஏன் 
என் கண்ணில் தெரிகிறது. 

முன்னெல்லாம் என் மீது அன்பாய்.. 
இன்றெல்லாம் என் மீது அம்பாய். 

உன்னால்தான் உன்னால்தான் 
என் காயம் ஆறி வந்தது.. 
முள்ளாக மாறி நின்றதேனடா..

தனியே தனியே என்னை 
தனித்தீவாய் மாற்றாதே.
இனியும் இனியும்
இதயம் இயலாதே.

ஒருநாள் ஒருநாள் என்னில்
விதையாக விழுந்தாயே.. 
மறுநாள் விதையை 
கேட்டு வந்தாயே 
.

No comments:

Post a Comment