Tuesday, September 14, 2010

75.மரணம் தருகிற விடுதலை


உலகில் உள்ள வலிகள் 
எல்லாம் மனதை தாக்குதே... 
உளிகள் கொத்திய கல்லாய் 
இதயம் மண்ணில் சாயுதே..

காதல் ஏந்திய  இந்தக் கைகளில் 
காயம் மாற்றி தந்ததேனடா.. 
புனிதம் என்று எதுவும் இல்லை..
மனிதம் கொண்டால் வலியும் இல்லை.. 

காரணம் சொல்லி காதலை அள்ளி 
எறியத் துணிந்ததேன்? 
மரணம் தருகிற விடுதலை எண்ணி 
பற்ற துடிக்கிறேன்.. 

ஒருநாள் உனக்கு புரியும் போதிலே 
ஆறுதல் சொல்ல என் பாடல் இருக்குமே
இப்போதெனக்குள் வழியும் துயரம் 
தாங்கிட இங்கு என் பாடலே உண்டு..   

உயிரை மாய்த்துக் கொண்டால் 
ஒருநாள் துயரமே.
உன்னை மாற்றி கொண்டால் 
என் வாழ்நாள் நீளுமே 


No comments:

Post a Comment