Monday, September 13, 2010

74.வெள்ளைப்பொய்


குழந்தைப் போல அழுகிறேனே
எந்தன் பேச்சை மீறயிலே.. 
குழந்தைப் போல சிரிக்கிறேனே
எந்தன் பேச்சைக் கேட்கையிலே


அடங்காமல் திரிந்தேனே
உன் காதல் என்னைத் தொட்டதும்..
மிதக்காமல் மிதந்தேனே
ஒரு வார்த்தை என்னைக் கேட்டதும்.. 


உலகம் யாவும் மாறுதே
உயிரில் மின்னல் ஓடுதே
என் கண்ணில் உன்னை ஊற்றிக் 
கொண்டு உறங்கச் சென்றேனே..


அன்பே என் ஆசையெல்லாம் 
உன்னோடு வாழத்தானே..
அது மட்டும் போதும் போதும் 
ஆயுளும் கூடும் கூடும்..


என்னைப் போல் உன்னை யாரும் 
நெஞ்சுக்குள் தைத்ததில்லை..
நீ மட்டும் அருகில் வந்தால்
நெஞ்சுக்குள் பூக்கள் பூக்கும்.. 


உன்னோடு நான் என்னோடு நீ
இரவுகள் தீரக் கூடுமோ?
கண்ணே உனை காணாமல் தவித்தேனே
பேச்சுக்களும் ஏச்சுக்களும்
எப்போதும் மாறக் கூடுமோ
என் ஜீவனே உன்னைப் பிரியாதே..


காலங்கள் ஓடுதே.. காயங்கள் கூடுதே
கடற்கரை மணலுந்தன் காலடியைத் தேடுதே.. 


அழகாகச் சிரித்துச் சென்றாய்
அடிநெஞ்சில் கீறிக் கொன்றாய்
ஏனென்று கேட்டால் மட்டும்
ஏதும் சொல்ல மறுக்கிறாய்
இரவெல்லாம் பேசிக் கொண்டாய்.. 
கனவெல்லாம் நீயாய் வந்தாய்..
காரணம் கேட்டு விட்டால்
காணாமலே போகிறாய்.. 


பேச விட்டு நீ சிரிப்பதும்
ஏசி விட்டு நான் முறைப்பதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
கொஞ்சி கொஞ்சி நான் குழைவதும்
நேசம் கொண்டு நான் அலைவதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
உன்னிலும் என்னிலும்
உள்ளுக்குள் உறங்கிடும்
காதலும் வெளி வரும் 
நாளை எதிர்பார்க்கிறேன்


நீ சொல்லும் வெள்ளைப்பொய்யால்
நம் நேசம் மாறாதன்பே 
நான் சொல்லும் வார்த்தையெல்லாம் 
பொய்யாகப் போகாதன்பே


எண்ணம் போல் வாழ்வென்று 
முன்னோர்கள் சொன்னதுண்டு
நீயே என் வாழ்வென்று 
காதல் வந்து சொன்னதின்று..

No comments:

Post a Comment