Sunday, September 12, 2010

73.உன்னோடு


மழையைப் போல வீழ்கிறேனே 
உந்தன் மூச்சு தீண்டிடவே..
அலையைப் போல வாழ்கிறேனே
உந்தன் பேச்சு இனித்திடவே..
யாரோடு யாரிங்கு 
சேர்ந்திடக் கூடுமோ
வேரோடு நீர் வந்தால் 
வேண்டாமென்று சொல்லுமோ

விண்ணேகினால் மண்மேவினால்
எங்கும் உந்தன் பிம்பம்
உண்ணாமலே உறங்காமலே
ஏங்கும் எந்தன் நாளும்
ஆமென்று சொல்லிட ஆண்டுகள் வாழுமே
தேமென்று நின்றிட தேகம் மண்ணில் வீழுமே..

உன்னோடுதான் என்னோடுதான் 
கண்ணாமூசி ஆடும்
காதோடுதான் கண்ணோடுதான்
ரகசியம் யாவும் பேசும். 
நில்லென்று சொல்லியும்
நிற்காமல் ஓடுதே 
தள்ளென்று கூறினால் 
தள்ளிவிட்டு தேடுதே.

No comments:

Post a Comment