Wednesday, March 3, 2010
48.மௌனமே ஏனடா?
பூங்காற்றாய் தீண்டிப் போனாயே
புதுக்கனவாய் மாறிப் போனாயே
ஜன்னல் வந்து நின்றாய்
என் பேர் கேட்டுச் சென்றாய்
ஒருநாள் மாலை வந்தாய்
காதல் கவிதை தந்தாய்
வா வா மறுமுறை வா
வானம் தூவும் மழைப்பூவா
தா தா பார்வை தா
கனவில் தந்ததை நேரில் தா
உயிரில் உயிரை அழகாய் நிறைத்தாய்
அடங்கவா உனக்குள்ளே அடங்கவா
கனவிலே தொடங்கவா
சிரிக்கிறேன் எனக்குள்ளே சிலிர்க்கிறேன்
இடைவெளி நமக்குள்ளே இருக்குதே
இதயத்தை நொறுக்குதே
அழிக்கவா அணைப்பினை அளிக்கவா
கைகள் நீள ஏனோ இந்த கண்கள் தாள
ஏதோ ஒன்றை சொல்ல வந்து
மறந்தே போகின்றேன்
தாகம் கொண்ட நெஞ்சுக்குள்ளே வேகம் துள்ள
வெட்கம் என்னை நெட்டித் தள்ள
துவண்டே போகின்றேன்
நனவோ கனவோ சம்மதம் சொல்வேன்
தேன் தேன் உனை நினைத்தேன்
என் ஜீவன் கொண்டு உனை நிறைத்தேன்
ஏன் ஏன் தடையும் ஏன்?
பூவைத் தாங்கும் தயக்கம் ஏன்?
மறைக்கிறேன் உனைக்கண்டால் மறைகிறேன்
உனக்குள்ளே ஒளிகிறேன்
உருகினேன் சொல்லவே மருகினேன்
அனுப்பவா தூதொன்று அனுப்பவா
பறவைகள் போதுமா?
சொல்லடா மௌனமே ஏனடா?
கத்தியின்றி ஒரு துளி ரத்தமின்றி
எங்கும் சிறு சத்தமின்றி
யுத்தம் நடக்குதடா
தூக்கமில்லை எதிலும் நோக்கமில்லை
பயணத்தில் வேகமில்லை
எதுவோ கணக்குதடா
அடியோ அணைப்போ இரண்டும் சம்மதம்
பார் பார் என்னைப் பார்
கண்ணில் ஏக்கம் வழிகிறதா?
சொல் சொல் ஒளிவின்றி சொல்
உனக்கும் தாக்கம் இருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
கத்தியின்றி ஒரு துளி ரத்தமின்றி
ReplyDeleteஎங்கும் சிறு சத்தமின்றி
யுத்தம் நடக்குதடா
தூக்கமில்லை எதிலும் நோக்கமில்லை
பயணத்தில் வேகமில்லை///
நல்ல வரிகள்!! தொடர்ந்து எழுதுங்கள்!!