இரவிலே என் இரவிலே
இயங்கினாய் நீயடா..
இதயமே ஆனாய் உணரடா
உறவிலே உன் உறவிலே
மயங்கினேன் நானடா..
மனமெல்லாம் தேனாய் நீயடா
காணாமல் போனேனே
என் கண்ணின் எதிரிலே - ஏதும் செய்ய
தோணாமல் உறைந்தேனே
உன் நினைவின் சிறையிலே
கைப்பிடித்து தூக்கி விட்டாய்
கடற்கரையில் - இன்று
கைப்பிடிக்க தயங்குகிறாய்
உயிர்தரையில் ..
இந்த கண்ணீரெல்லாம் மிக வலியானது
இதயத்தை கிழிக்கின்றது
அட நீ தொட்டதால் அந்த இதயம் கூட
வலியோடு சிரிக்கின்றது..
வேண்டாமே துயரங்கள்
நம் அன்பின் பாதையில்
தீண்டாயோ விழி பார்த்து
நான் மீள்வேன் வேகத்தில்
உனக்கெனவே உயிர் கொண்டேன்
என நினைத்திருந்தேன்
உன்னை நினைக்கையிலே
உயிர் முழுதும் தேன் கொண்டேன்
உன் பிடிவாதத்தில் நம் நேசத்தினை
பலியாக்கக் கூடாதடா ..
கரை கண்ட பின் மீண்டும் கடலுக்குள்ளே
எனை வீசி போகாதடா ..
ஏன் இந்த பிரிவென்று
மனம் கேட்கும் போதிலே
இதுவும் ஒரு நிலையென்று
சொல்லும் காதலே
என எடை தாங்கி உன் தோள்
தந்தாய் நான் கீழிறங்க..
என மனமறிந்தும் ஒரு சொல்
சொன்னாய் மீளா விழியுறங்க ..
இந்த காதல் என்ன ஒரு கவிதை போலா
ரசித்ததும் ஓரங்கட்ட
இந்த காதல் முழு வாழ்க்கைதானே
நீயின்றி எங்கே செல்ல
தீராது நம் காதல்
இந்த ஜென்மம் முடியலாம்
சோராது என் மனமும்
உன்னைச் சேரும் வரையிலும்..
No comments:
Post a Comment