என் கண்ணா
என் மேல் காதல் இல்லையே?
இரவுதான் காத்துக் கிடக்கு
இதயம்தான் வேர்த்துக் கிடக்கு
முதல் முறை நாம் சந்திக்கையில்
முன் ஜென்ம பந்தம் கண்டேன்
மறுமுறை நாம் சந்திக்கையில்
காதலுக்கே சொந்தம் கொண்டோம்
உன்னெஞ்சில் எனக்கென்று
இடமுண்டு நானறிவேன்
என் ஆயுள் தீருமுன்னே
உன் வாயால் சொல்ல வைப்பேன்
விடியாத இரவு இல்லை
படியாத உறவு இல்லை
இது பொய்யில்லை
நீயதை உணர வைப்பேன்..
என்னெஞ்சில் அடைகாத்த
காதலிங்கே ஜெயித்திடனும்
கிளைதாவும் குரங்குமனம்
ஊர்க்கதையும் பொய்த்திடனும்
உன்னோடு வாழ்ந்திருந்தால்
மரணமிங்கே வாராது
உயிரே நீ விலகாதே
என்தேடல் தீராது
கனவே நீ கலையாமல்
நினைவே நீ தேயாமல்
என் வாழ்க்கைக்கு நீயொரு
அர்த்தம் சொல்லு..
No comments:
Post a Comment