Monday, June 28, 2010

58.உறவாடு எந்தன் ஜீவனே


அலையாடும் கண்கள் இமை சேருதே
விளையாடும் கைகள் இதம் சேர்க்குதே
கொடிப்பூக்கள் வந்து மடி சேருதே
என்னோடு நீயும் சேரடா..


இரவாக வந்து நீ தீண்டினாய்
உறவாக வந்து நீ தாங்கினாய்
கரையாத இரவில் பிரியாமலே
உறவாடு எந்தன் ஜீவனே


வேராக வந்து பூ தூவினாய்
நேராக வந்து வலி நீவினாய்
போதாது அன்பே போதாதடா
ஜென்மம் ஏழுமே தீராதடா


நட்பாக வந்தாய் நடை பழகினேன்
விழியாக வந்தாய் வழி காண்கிறேன்
உயிராக வந்தாய் இணை சேர்கிறேன்
பிரியாதே என்னை இனியுமே

No comments:

Post a Comment