Sunday, June 27, 2010

52.அழகே வா


ஒரு பார்வை தந்தாய் 
என் விழி பூத்தது
ஒரு வார்த்தை சொன்னாய்
என் உயிர் வேர்த்தது

இதழ் சேர்க்காமல் எனக்குள்ளே
அனல் மூட்டினாய்
கைகோர்க்காமல் நரம்பெல்லாம்
முறுக்கேற்றினாய்..

அழகே வா என் ஆசை தீர்க்க 
அழகே வா என் ஓசை நீர்க்க

நீ பேசாத நாட்களில் 
என் நாட்குறிப்பேது கண்ணா
நீ தீண்டாத நாட்களில்
என் பூ உதிராதோ கண்ணா

உன் சுவாசம் இடம்மாற 
என்னில் புது வாசம் பிறக்கின்றதே
நம் நேசம் மாறாது 
என்றும் என்ற கானம் இசைக்கின்றதே

No comments:

Post a Comment