Sunday, June 27, 2010

56.காற்றைக் கைது செய்




பொடியனே தெரியுமா?  - என் 
புதையல் நீதானடா
விடியலே தெரியுமா?  - என் 
விழியும் நீதானடா


உந்தன் பேரைத்தான் கேட்டால் போதும்
உயிரில் பூப்பூக்குதே
உந்தன் பார்வைதான் பட்டால் போதும் 
இரவில் ஒளி தாக்குதே
இசையும் கேட்கின்றதே


இரக்கம் சிறிதுமின்றி என்
உறக்கம் பறித்துப் போனாய்
காற்றைக் கைது செய்து என்
வாசம் திருடிப் போனாய்


உன்னைக் காணாமல் என் மனமிங்கு 
தூண்டில் புழுவானதே
வார்த்தை சொல்லாத போதும் உந்தன் 
பார்வை வலுவானதே
காதல் நிலையானதே


எனக்குள் நீயும் வசிக்க
என் உயிரில் கூடு செய்வேன்
எனக்குள் இருக்கும் காதல் 
மடை மாற்றி உன்னில் தைப்பேன்..


சிரித்து சிரித்தேதான் எந்தன் 
கவனம் ஈர்த்து சிலையாக்கினாய்
மறுத்து மறுத்தேதான் என்னை 
உன்னில் கரைத்து நுரையாக்கினாய்
நானும் நீயாகினாய்..

No comments:

Post a Comment