அப்போதென் போல் காயம் படலாம்
என் உயிரில் கலந்த நினைவுகள் எல்லாம்
உன் உறக்கம் பறித்து வேதனை தரலாம்
ஒரு ஒற்றைக் கேள்வியால் எனை மீட்டாய்
அதே ஒற்றைக் கேள்வியால் தீயிலிட்டாய்
அந்த கேள்விகளெல்லாம் உன்னை உலுக்கி
கேள்விகள் கேட்கும் நாள் வரலாம்
காதல் செய்த குற்றம் தவிர
வேறு என்ன செய்தேன்?
காதல் மட்டும் வேண்டாமென்றால்
நானும் எங்கு செல்வேன்?
அந்த காதல் உன்னைக் கைது செய்யும்
விடுதலை கிடையாது
அமுத காதல் விஷமாய் மாறும்
பிழைக்க வழியேது?
ஒருநாள் நீ உணரலாம்
அதுவரை நானும்
இருந்தால் பார்க்கலாம்
காதலும் வாழும்
உன் விழி பார்க்கையில்
என் உயிர் போகனும்
என் விழி மூடினால்
உன் கை தாங்கணும்
உனக்குள்ளே நானிருக்கேன்
வந்து விடு தந்து விடு.
No comments:
Post a Comment