Sunday, June 27, 2010

55.கவிதை கனவு



நட்புக்குள்ளே காதல் பூவை யார் வைத்தது?
நெஞ்சுக்குள்ளே தீயை வைத்து யார் தைத்தது?
எட்டி எட்டி போகும் மனதை நீயறிகிறாய்
தட்டி தட்டி மீண்டும் என்னில் போர் தொடுக்கிறாய்..

இரவு நேர விண்மீன் பெண்ணாய்
என்னை மாற்றினாய்..
இதயம் வேண்டி நின்ற போதும் 
சிரித்து மழுப்பினாய்..
இது வழியா? இதய வலியா?

என்ன சொல்ல? என்னைக் கொல்ல
உந்தன் ஒற்றை வார்த்தை போதுமே..

உறங்கும் போது உந்தன் குரலில் 
என்னை மறக்கிறேன்
விழிக்கும் போது என்னை மறந்து
உன்னை நினைக்கிறேன்..

காயம் நூறு கண்ட போதும் 
தாங்கிக் கொள்கிறேன்.. 
உன் ஒற்றை வார்த்தை தாங்காமல்தான் 
பொங்கி அழுகிறேன்.. 

கவிதை கனவு கண்கள் வழியே 
நிறைந்து வழிகிறாய்.. 
நெஞ்சுக்குள்ளே ஓவியமாய் 
நின்று சிரிக்கிறாய்.. 

வானம் என்ன பூமி என்ன 
மாறிப் போகலாம்..
நீ சொன்ன வார்த்தை மட்டும் 
என்றும் மாறிப் போகுமா? 

கடலும் என்ன அலையும் என்ன 
வற்றிப் போகலாம்.
எந்த காயம் கூட 
காலப்போக்கில் ஆறிப் போகலாம்..

எந்த உறவும் வேண்டாமென்று 
தனித்து வந்தவள் 
உன் காதல் மட்டும் போதுமென்று 
வாழ்ந்து வருபவள்.. 

போதும் போதும் உந்தன் மௌனம்
என்னை அரிக்குதே..
வேண்டும் வேண்டும் என்று உள்ளம்
உன்னைத் துரத்துதே..

என்னை விடவும் உன்னை அதிகம்
காதல் செய்கிறேன்..
உன் புன்னகைக்கு எந்தன் வாழ்வை
ஈடு தருகிறேன்.. 

No comments:

Post a Comment