நீராக நனைத்தது
நாள்தோறும் உன்னை
நினைத்து வேர்த்தேனே
உயிரினை முழுதுமாய் வார்த்தேனே
என்ன சொல்லுவாய் என்றே
நான் ஏங்கினேன்
என்ன செய்யுவேன் உன்
ஜீவன் தாங்கினேன்.
யாராரோ எனை பார்த்து
அவர் நேசம் சொல்ல
நானோ உன் விழி பார்த்து
என் நேசம் சொல்ல
துடிக்கும் மனமே வாராய்
துணிந்து காதல் கூறாய்
ஏனடா யோசனை?
இன்னும் தாமதம் என் மனம் தவித்திடும்.
எது நல்லது என்பதும் அறிந்திலேன்
எது கேட்டது அதையும் புரிந்திலேன்
ஏதோ என் வழி பார்த்து
நான் போகும் போது
நீதானே வரவேற்று
நிழல் சேர்த்தாய் நூறு
இதமான வார்த்தை தந்தாய்
இதயத்தில் வேராய் ஆனாய்
காலம்கை கூடட்டும்
எட்டி பார்க்கிறேன்
என்னுள் நீ வெளிச்சமாய்..
No comments:
Post a Comment