Wednesday, February 17, 2010

45.என்ன செய்வேனோ


இரவிலே எனது இரவிலே
இதயத்தை திறந்து சிரிக்கிறாய்
கனவிலே எனது கனவிலே
கைகளைக் கோர்த்து செல்கிறாய்

ஏன் பின்னர் நேரில் மறுக்கிறாய்
கண்ணைக் குளமாக்கி விடுகிறாய்
எனக்குள்ளே வலிக்கும் காயங்கள்
ஆற்றும் மருந்தேன இருப்பாயா?

முதல் முறை நேரில் பேசினாய்
புன்னகையில் நேசம் தூவினாய்
அந்த முதல் இரவுதான்
நீயென்னுள் ஆறாகப் பாய்ந்தாயே
பின்னர் வந்த இரவினில்
நீயென்னுள் வேராகிப் போனாயே

இது என்ன மாயமோ!
இரு இமை தொட்ட காயமோ?

எச்சரிக்கை செய்தும் மனது
எந்தன் பேச்சை மீறிச் செல்லுது
என்ன செய்வேனோ?

இது பனி உறையும் காலமா?
அனல் வந்து உருக்கும் நேரமா?
என்ன சொல்லி என்னைத் தேற்ற
நான் கொண்ட நோக்கமே மாறாதே
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
உண்மையும் சொல்லத் துணிவில்லை

இதற்கு மேல் சொல்லவா?
நானும் பெண்தான் அல்லவா?

உந்தன் வழி காத்து நின்றேன்
எந்தன் விழி நோகக் கிடந்தேன்
என்ன சொல்வாயோ?

No comments:

Post a Comment