Wednesday, February 24, 2010

46.சில் சில்


மழையாகத் தூறிச் சென்றாயே
அலையாக வாரிக் கொண்டாயே

காலை மாலை எல்லை
கண்ணா நமக்கு இல்லை
இரவு ஒன்றே போதும்
இதமாய் பேசிட தோன்றும்

சில் சில் என அழைப்பாய்
சட்டென மலர்வேன் ஒரு பூவாய்
நில் நில் என உரைப்பாய்
ஓடி மறைவேன் சிறு காற்றாய்
குரலால் என்னை மயக்கிப் போனாய்..

வருகிறாய் இரவினில் வருகிறாய்
இமைகளைத் தொடுகிறாய்
இருளிலே கரைகிறேன் உறைகிறேன்..
விடிகையில் விரல் தொட்டுப் பார்க்கிறாய்
விருப்பங்கள் சொல்கிறாய்
விரும்பியே தருகிறேன் நிறைகிறேன்

சின்ன தொடுதல் போதுமடா
சிதறிப் போவேன்
ஒற்றை வார்த்தை போதுமடா
பதறிப் போவேனே
எந்தன் கோபம் உந்தன் முன்னால்
நுரையைப் போகும்..
உந்தன் முகம் கண்டால் போதும்
துயரம் மறப்பேனே..
உனையே எனக்கு பிடிக்கும் காரணம்

சொல் சொல் சொல்லிடவா
பொழுதுகள் ஆயிரம் போதாதே
வா வா எழுதிடவா
பக்கங்கள் லட்சம் போதாதே
எனையே திருடி எதிரினில் சென்றாய்

அளக்கிறாய் கண்கொண்டு பிளக்கிறாய்
எனக்குள்ளே சிதறினேன்
உயிர்வரை இனிக்கிறேன் இணைகிறேன்
சிரிக்கிறாய் கவலைகள் மறக்கிறேன்
நிழலாகத் தொடரவே
விரும்பினேன் சொல்லவே தயங்கினேன்

உன்னைப் போல என்னை யாரும்
வென்றதில்லை
நானும் கூட தோற்றதில்லை
இதுதான் காதலடா
கொஞ்சி கொஞ்சி பேசும் போது
குழந்தையாவேன்
கோபத்திலே திட்டிச் செல்வேன்
அதிலில்லை மோதலடா
இனி நான் உன்னை விலகிட மாட்டேன்

சில் சில் உன் மனசில்
உலவித் திரிவேன் யார் தடுப்பார்?
சொல் சொல் ஒருமுறை சொல்
உயிரின் உணர்வை யாரறிவார்?
இனி நம் வாழ்வில் வசந்தங்கள் கூடும்..

No comments:

Post a Comment