Tuesday, February 16, 2010

44. உயிர்த்தீவில்



முதல் தொடுதலிலே உயிர் குடித்தாய்
இன்னும் என்ன?
அந்த மயக்கத்திலே மீளாமல்
மோகம் நாண..

உன்னை எட்டி நின்றே தான்
கட்டிக் கொள்கிறேன்
கண்ணால் நானே
உன் மென்மையிலே
எனை மறந்தேன் முழுதாய் தானே

உனது தூண்டலே எனை மலர்த்த
எனது கவிதை உனை அணைக்க
ஏதோ சொல்ல வருகின்றேன்
எதையோ சொல்லிப் போகின்றேன்

எது வரை நீளும்
என் தேடல் நாளும்
உன் பார்வையின் ஆழம் புரியாதா?

இது வரை மோதல்
இது வரை காதல்
என் விழிப்பின் நோக்கம் தெரியாதா?

கண்களை மூடி காட்சிகளைத் தேடும்
இது என்ன நிலையோ சொல்..
 உன்னைக் கொடுத்து எனைத் திருடும்
இது என்ன ஞான நிலையோ சொல்..

துள்ளிக் குதித்தாய் அலையாக
தழுவிக் கொண்டேன் கரையாக..
இன்னும் சொல்வேன் வலைப்பூவில்
உனையே சுமப்பேன் உயிர்த்தீவில்

இரவினில் வருவாய்
இமைகளைத் தொடுவாய்
இருளில் கரைப்பாய் இதமாக..

விடிகிற போதும்
விரல் தொட்டுப் படர்ந்து
விருப்பம் சொல்வாய் மெதுவாக..

No comments:

Post a Comment