துடிதுடிக்கும் இதயத்தின் இசையறிவாயா?
மௌனிக்கும் இதழின்
துடிப்பறிவாயா?
துடிப்பறிவாயா?
நடனமாடும் விரல் பேசும்
ரகசியம் அறிவாயா?
உடன் நடக்கும்
பாதச் சுவடின் வலியறிவாயா?
உன் சுவாசம் தீண்டிப் பூக்கும்
என் இதழறிவாயா?
உன் வாசம் தாக்கி உதிரும்
என் சோகமறிவாயா?
நானுமறியாது
சிறைப்பட்டேன் இரங்கி விடுவிப்பாயா?
நீயுமறியாது
திருடினாய் திரும்பத் தருவாயா?
No comments:
Post a Comment