Friday, February 5, 2010

35. ஒரே பாடல் உன்னை அழைக்கும்..

இந்த காதல் ஒரு மோசமான கனவுதானா?
இந்த கனவு ஒரு நேசமான காதல்தானா?

எப்படி என்னுள் வந்தாய்?
இப்படி இம்சைகள் தந்தாய்?

எந்தன் வழியில் காத்து நின்றாய்...
எல்லா நொடியும் காதல் என்றாய்..
கரையாத கல் நெஞ்சை
நுரையாக மாற்றிச் சென்றாய்..
உருகாத என் மனதை
ஒருவாறு தேற்றிச் சென்றாய்..

ஏன் எண்ணம் நிறைத்தாய்..
ஏன் பின்னர் மறைந்தாய் ..
ஏன் என்னில் உறைந்தாய்..
ஏன் எங்கோ விரைந்தாய்..

இந்த மௌனம் நெருப்பாய் சுடுகிறதே..
அணைத்து விடு.. அணைந்து விடு..
இந்த பார்வை கோபம் சொல்கிறதே ..
பொறுத்து கொள் புரிந்து கொள்..

இனி வரும் காலம் வசந்தமாகும்..
இதுவரை வாழ்வு கசந்த போதும்..
இந்த நம்பிக்கை இருக்கும் வரை..
எந்தன் நெஞ்சில் என்ன குறை.. ?

No comments:

Post a Comment