Tuesday, February 9, 2010

37.மடிதேடி


உன் பாராட்டில் நான் மலர்கிறேன்
உனை பார்க்காமலே உலர்கிறேன்
நீர் கொஞ்சம் கொண்டு வா
வேர் கொஞ்சம் நனைத்துப் போ

தாலாட்ட எனக்கும் தாயில்லை
தாலாட்ட நானும் தாயில்லை 

மடிதேடி நானும் அலைகிறேன்
காற்றடித்த மேகமாய் கலைகிறேன்

நான் மீண்டும் குழந்தையாகும் வரம் வேண்டும்
நான் மீண்டெழ காயங்கள் ஆற வேண்டும்

தொலைகிறேன் என்னைக் கண்டெடு
அலைகிறேன் என்னை வென்றெடு

என் முற்றத்தில் கோலமானாய்
என் பின்வாசலில் மலரானாய்

எப்படி எனக்குள் வண்ணமானாய்?
என் நினைவெங்கும் வாசமானாய்? 

No comments:

Post a Comment