Wednesday, February 10, 2010

38. கட்டிப் புரளும் வெள்ளம்

மழையெனவே நனைத்திடவா
அலையெனவே அணைத்திடவா
நிலவெனவே நிறைத்திடவா

ஒற்றைச் சொல்லில் உயிர் நிரப்பு
ஒற்றைக் கல்லின் சிலை சிறப்பு
ஒற்றை அணுவே புவி பிறப்பு

இன்னும் என்ன சொல்லிடுவேன்
இதயம் ஏறிக் கிள்ளிடுவேன்

பயம் எதற்கு இனி உனக்கு
வயமானாய் நீ எனக்கு
காயம்யாவும் உதிர்ந்திருக்கு

தொட்டுச் செல்லும் தென்றல் தான்
கட்டிப் புரளும் வெள்ளம் தான்
எட்டி நடக்கும் காலம் தான்

யாவும் நீயாய் ஆனதெப்போ?
காயம் ஓடிப் போனதிப்போ..

No comments:

Post a Comment