ஒருவரிதான் ஒருவரிதான்
கூறிட தவிக்கிறேன்
கூறிட தவிக்கிறேன்
கீழிமை நான் மேலிமை நீ
உறங்கிட நினைக்கிறேன்
உறங்கிட நினைக்கிறேன்
என்னிடம் நீ உன்னிடம் நான்
மாறிட விரும்பினேன்
மாறிட விரும்பினேன்
இரவினில் எதற்காக எதற்காக
அனல் கூட்டுகிறாய்
அனல் கூட்டுகிறாய்
உறவென எனக்காக எனக்காக
உனை மாற்றுகிறாய்
உனை மாற்றுகிறாய்
அருகினில் நீயும் வந்தாய்
அவஸ்தைகள் மொத்தம் தந்தாயே
பெருகிடும் கண்ணீர் துளியில்
உனது பிம்பம் காண்பாயே
உனது காதல்தான் மருந்தா?
விலகிடவே விலகிடவே ஒரு மனம் தவிக்குதே
விரும்பிடவே விரும்பிடவே ஒரு உயிர் துடிக்குதே
என் இரவில் உன் இரவை கரைத்திட நினைக்கிறேன்
உன் விழியில் என் விழியை பொருத்திடப் பார்க்கிறேன்
இனி நாம் ஒருநாளும் கணம்தோறும் பிரியாமலே
உனக்கோ என்னாசை எப்போதும் புரியாமலே
எதை நான் உனக்கு சொல்ல?
எதைத்தான் எனக்குள் சொல்ல
உண்மை யாவும் சொல்ல
உனக்கொரு தருணம் வருமா?
உனது மௌனத்தில் உறைந்தேன்..
No comments:
Post a Comment