Saturday, February 13, 2010

39.உன் ஆசைகள் என் தேவைகள்



என் காதலுக்கு தோல்வியில்லை 
உன் காதல் சொல்லத் தேவையில்லை 
உன்னை மறந்தால் நான் இறப்பேனடா..

உன் விழி பார்த்து உன் விரல் சேர்த்து 
நடைபோடும் ஒரு நேரத்தில் 
என் பெரும் சோகம் அது எனைவிட்டு
உருண்டோடும் வெகுதூரத்தில்

என் சோகங்கள் என் பாரங்கள் 
என்னோடு அது போகட்டும்
உன் ஆசைகள் உன் தேவைகள் 
இனி என்னோடு அது வாழட்டும். 

உன் மடி மீது என் தலை சாய்த்து  
மரணத்தை நான் வரவேற்பேன். 
உன் விழி மோதி உன் தலைகோதி 
என் பிறப்பினையே முழுமை செய்வேன்

No comments:

Post a Comment