Monday, February 15, 2010

42.கண்டு கொண்டாடு


இதயமே கொள்ளாத தவிப்பிது
இமைகளில் இல்லாத துடிப்பிது
இடைவெளி கொல்லாமல் கொல்லுது
இசைந்து வருவாயா?

உலகமே தன்னாலே மறந்திட
உடலிலே செம்பூக்கள் வெடித்திட
உயிரிலே தேனாறு பாய்ந்திடும்
உணர்வு தருவாயா?

தேகம் தீண்டாமல் தேயுது
மோகம் கூறாமல் ஓயுது
தாகம் தீராமல் தீருது
தணிக்க வருவாயா?

யாரும் இல்லாத பொழுதிலே
வேரும் பூக்காதோ மண்ணிலே
சேரும் இல்லாத கடலிலே
அலையே வருவாயா?

வானும் காணாத நிலவிது
வண்டும் காணாத மலரினை
இருளும் காணாத ஒளியினை
பிறக்கச் செய்வாயா?

காற்றும் புகாமல் நெருங்கிடு
கனவே வராமல் தடுத்திடு
கவிதை விடாமல் எழுதிடு
கண்டு கொண்டாடு

No comments:

Post a Comment