Friday, January 22, 2010

24. உயிரே நில்லடி..



உனக்கும் என்னைப் பிடிக்கிறதா?
இதயம் சொல்ல மறுக்கிறதா?
இமைகள் கொஞ்சம் சிரிக்கிறதா?
உண்மை சொல்லடா..

உன் நெஞ்சத்திற்குள் நிழல் இல்லை..
என் நெஞ்சமொன்றும் புழல் இல்லை.

பசித்திருக்கும் மனதுக்கு
என்ன சொல்லப் போகிறாய்?
விழித்திருக்கும் இரவுக்கு
என்ன தர போகிறாய்?

வளர்வதெல்லாம் வளர்ச்சி அல்ல..
தேய்வதெல்லாம் வீழ்ச்சி அல்ல..
உன் தாகம் ஆறாய் பாயட்டும்..
என் தேகம் மெல்ல தேயட்டும்..

கனவினில் மிதக்க வா
கைகளால் தவழ வா
கண்களில் நுழைய வா
நீ அனுமதி கேட்டது..
அதை நான் ஏன் மறுப்பது?

எனக்கும் உன்னைப் பிடிக்கிறது..
இதயம் சொல்ல துடிக்கிறது
இருந்தும் ஏதோ தடுக்கிறது..
உயிரே நில்லடி.
.

No comments:

Post a Comment