Wednesday, January 27, 2010

30.உன் மழை தீண்டுமா?

இசையென இசையென 
இதயமே வருடினாய் 
இமைகளைத் திருடியே போனாயே..

உன் விழி மோதினேன் 

தாய் மொழி தேடினேன் 
என் வழி மாறினேன்.. 

உன் மழை தீண்டுமா?  

என் நிலம் பூக்குமா? 
புது திசை தோன்றுமா?  

முன் தினம் பார்த்ததில் 

நரம்புகள் வேர்க்குதே..
அனுதினம் அருகிலே வேண்டுகிறேன்..  

சிறு ஊடல் கொள்ள 

பெரும் கூடல் கொள்ள 
வரும் நாள் பார்க்கிறேன்.. 

நீளும் பாடல் செய்தேன்.. 

நாளும் கவிதை செய்தேன் 
காதல் விதை தூவினேன்.. 

உன் குரல் சுமந்திடும் 

வரமொன்று தந்திடு
.உன் நிலம் தாங்கிடும் நிலமாவேன்.. 

என் நிலை மாற்றினாய்..

உயிர் சிலையாக்கினாய்.. 
வந்து கடைத்தேற்றுவாய்.. 

ஒரு மழையுமில்லை... 

சுடும் வெயிலுமில்லை.. 
ஏன் குடையாக்கினாய்? 

No comments:

Post a Comment