Wednesday, January 20, 2010

23. இமை தொடு

அடை மழை காலமா?
அனல் தொடும் நேரமா?
இறக்கவா? பிறக்கவா?
சொல்வாய் நீயே..

பார்வைகள் போதுமா?
ஸ்பரிசங்கள் போதுமா?
ஒருமுறை உயிர் தொட
வருவாய் நீயே..

உன் குரல் மதுரமா?
உன் மொழி மதுரமா?
அறிந்திட துடிக்கிறேன்
எனக்குள் நானே..

இமை தொடும் போதிலா?
இதழ் தொடும் போதிலா?
மயங்கியே சரிகிறேன்
உன்னால் தானே..

போனவை போகட்டும்
புதிதாய் பிறப்பேடு
முழுதாய் வாழ்ந்திட

முயல்வோம் நாமே.. 

No comments:

Post a Comment