Wednesday, January 27, 2010

31. யாவும் நீயாய்

வீசும் காற்றே வீசும் காற்றே 
கவிதை சொன்னாய் காதில் நேற்றே 
கனவில் நீயும் வந்த சுவடை 
கழற்றி நானும் பதுக்கினேன்.. 


மூங்கிலின் இலையினை 
யாழெனவே மீட்டினாய் 
பூக்களின் இதசகளில் 
அனலினை மூட்டினாய்
அன்பே 
மழை தூறல் நீ..மண் வாசம் நீ  
என் காலை நீ..என் சோலை நீ 
என் தேடல் நீ..என் பாடல் நீ 
உன்னோடுதான் என் இன்பமே.. 
நெஞ்சே
என் வானம் நீ..என் மேகம் நீ 
என் தாகம் நீ.. என் மோகம் நீ 
என் வேகம் நீ.. என் ராகம் நீ 
என சொல்லவா என் செல்லமே.. 


உன்னைக் காண எந்தன் மனமும் 
ஏங்கிக் கிடக்கும் மர்மமென்ன? 


யாரும் வேண்டாம் தனிமை கொண்டேன் 
யாவும் நீயாய் வந்து நின்றாய் 
என் செய்வேனோ? எனை வைவேனோ? 
கண்களே கண்களே ஏன் திரியானது? 
என் மனம என் மனம ஏன் எதிரானது? 
உன் சொல்லும் என் சொல்லும் அட புதிரானது.. 
அழகே 
உன் வார்த்தையில் உன் நேர்த்தியில் 
உன் செய்கையில் உன் பொய்களில் 
சிறு சண்டையில் ஒரு கூடலில் 
என் சிந்தையில் நீ ஊறினாய்..
பொடியா 
உன் இளமையில் உன் இனிமையில் 
உன் பொறுமையில் உன் திறமையில் 
உன் நெருக்கத்தில் உன் ரசனையில் 
என் தனிமையை நீ பருகினாய்.. 


No comments:

Post a Comment