Friday, January 22, 2010

25. கண் மூடு..

என் கண்களுக்குள்
உன்னை ஊற்றியிருந்தேன்..
என் இதயத்திற்குள் உறைந்தாய்..

என் இதயத்திற்குள்
வேர் பிடித்திருந்தாய் - அதை
என் கண்கள் பூக்க உணர்ந்தாய்..

கண் மூடும் முன்
என்னருகே வந்து விடு..
மண் மூடும் முன்
உன்னை நீயே தந்து விடு..
 

கண் மூடினாலும் இமைகளால்
உன்னை எதிர்பார்ப்பேன்..
மண் மூடினாலும் இலைகளால்

உனக்கு நிழல் சேர்ப்பேன்..



நான் பேசுவதெல்லாம் உளறல்
நான் பார்ப்பதெல்லாம் கானல்..
நான் நடப்பதெல்லாம் கோணல்..

மெதுவாய் மெதுவாய் கரைகிறேன்..
உனக்குள் தானே உறைகிறேன்..
உன்னைக் கண்டால் மறைக்கிறேன்..
தனியே நான் ஏன் சிரிக்கிறேன்..

நீ அங்கே நான் இங்கே 

பார்ப்போம் ஒரே காட்சியை..

No comments:

Post a Comment