
நான் மலரில்லை நீ மணமில்லை
நான் நிலவில்லை நீ இரவில்லை
நான் நிஜமில்லை நீ நிழலில்லை
நான் நீயில்லை நீ நானில்லை..
நான் விழுகையில் நீயும் தாங்குகிறாய்
நாம் நிலம் நாம் மழை
நான் தொட்டாலும் நீ மலர்கிறாய்
நாம் மலர் நாம் மனம்
நான் இருளானால் நீ ஒளியாகிறாய்
நாம் நிலவு நாம் இரவு
நான் நிழலானால் நீ நிஜமாகிறாய்
நாம் நிழல் நாம் நிஜம்..
நான் நானாகிறேன்..
நீ நீயாகிறாய்..
நாம் நாமாகிறோம்..
நாம் நாமாகிறோம்..
No comments:
Post a Comment