Sunday, January 31, 2010

33.உனைவிட்டு வேறிடம்?


உன் கைப்பிடித்து நடந்தாலே 
என் பயணங்கள் நீளும் 
உன் நிழல் விட்டு பிரிந்தாலே 
என் ஜீவன் நோகுமே.. 

திரும்பப் பெற்றுக் கொள்ள 
இதயம் என்ன வெறும் பொருளா? 
விரும்பி தந்து செல்ல 
அதுவும் என்ன பரிசுப் பொருளா? 

வெறும் பொருளுமில்லை..
பரிசுப் பொருளுமில்லை.. 

உயிர்த்திரள் அதில் 
உனக்களித்தேன் ஓரிடம்..
இனி நானிங்கு செல்வேன் 
உனைவிட்டு வேறிடம்? 

No comments:

Post a Comment