Friday, January 29, 2010

32. சின்ன வானம்


என்ன என்ன நான் சொல்வேன் 
அட நானும் நானில்லை..
உன்னை உன்னை நான் கண்ட
முதல் நாளும் வீணில்லை..
முன்னும் பின்னுமாய் சுற்றும்
ஒரு பூமி ஏனில்லை.. 

ஒரு திட்டமின்றி வட்டமின்றி 
தொட்ட தென்றல் நீயா ?
என் நீயா?  எனக்கே வந்தாயா?  
நீயா ஒரு தீயா? 

உன் மனதாலே என்னை 
முழுதாய் அடைந்தாயே 
உன் சிரிப்பாலே என்னை 
நுரையாய் உடைத்தாயே.

வாயாடி பெண் என்னைத் தோற்கடித்தாயே 
தேயாத நிலவென்னை சிறைபிடித்தாயே   
ஓயாத நினைவில் நீ  மூழ்கடித்தாயே 
பாயாத வெள்ளத்தின் வேகம் குறைத்தாயே.. 

சிறகு ஒன்று ஈந்தாய் 
பறக்க கற்று தந்தாய் 
பிறகு எங்கு சென்றாய்?
உருகுதே என் நொடியும் 
பெருகுதே என் வலியும்.. 

கண்ணில் காணும் யாவுமே 
அழகானதே  பொதுவா?
சின்ன சின்ன கனவுகள் 
கைகூடும் நாள் இதுவா?

உன்னை விதையாய் ஒளித்து
வைத்தேன் விருட்சமானாய்.. 

யாரைச் சொல்லுவேன் நானும் 
நானாக நானில்லை 
உன்னைக் கண்டதன் பின்னே 
தேனும் தேனில்லை..
எல்லை ஏதுமே கொண்ட 
வானம் வானில்லை.. 

எந்தன் கண்ணில் நீயும் 
சின்ன வானம் போலே 




No comments:

Post a Comment