Monday, December 28, 2009

22. வந்து விடு

நீயில்லாத உலகினில்
நான் உயிர்த்திருக்க மாட்டேன்..
நீயில்லாத உறவொன்றை
நான் நினைக்கவும் மாட்டேன்..

உனக்குள்ளே ஓடியாடி
விளையாட வேண்டும்..
எது சொன்ன போதும்
தலையாட்ட வேண்டும்..

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்..


உன் சிரிப்பு போதும் என் இதழ்கள் மலர..
உன் அணைப்பு போதும் என் ஜீவன் புலர..

வந்து விடு நெஞ்சே நேரம் கடத்தாமல்..
தந்து விடு உயிரே என்னை படுத்தாமல்..

No comments:

Post a Comment