
நீ தொடும் எதுவும் பழுதில்லை..
இதைப்போல் கனவொன்றும் கண்டதில்லை
உனைப் போல எனை யாரும் வென்றதில்லை..
நீ கரும்பென இருப்பது உன் தவறா?
நான் எறும்பென ஊர்வது என் தவறா??
உன்னோடு மட்டும் எல்லை மீறுவேன்..
உன் கண்ணில் எனை ஊற்றி தீருவேன்..
எனக்காக விழித்திருந்த
என் இமையே நீயுறங்கு..
எனக்காக பேசி ஓய்ந்த
என் இதழே நீயுறங்கு..
ஒளி எப்போதும் ஒளிதான்
உன் விழி போதும் -அது
சொல்லும் பல மொழிதான்
நீ ஒளிவீசினால் என் தேகம் தாங்குமோ
உன் விழி பார்த்தால் என் தாகம் நீங்குமோ?
உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்?
சொல் மனமே சொல்..
நீ நினைப்பதெல்லாம் சொல்..
No comments:
Post a Comment