Sunday, December 27, 2009

20.பொய் சொல்வேனா?

உன் தோள் சாய்ந்து பயணிக்க ஆசையில்லை..
உன் சுவாசக் காற்றில் இளைப்பாறும் மோகமில்லை..

உன் ஸ்பரிசம் பட்டு பூரிக்கும் எண்ணமில்லை..
உன் தலைகோதி மடிமீதிட விரும்பவில்லை..

என்ற பொய்யைச் சொல்வேனா?
இதனை மெய்யென அறியாயோ?

உன் எச்சில் உண்டு நான் களிப்பேன்..
உன்னை பிச்சு பிச்சு நான் தின்பேன்..

நீ உறங்கிய பின்னே துயில் கொள்வேன்..
நீ எழுப்பிய பின்னே துயில் களைவேன்

என்றும் மெய்யைச் சொல்வேனா?
இதனை தானாய் உணராயோ ?

உன் நிழலுக்குள்  நான் வசிப்பேன்..
என் சோகம் மெல்ல வடிந்து விடும்...

என் நித்திரைக்குள் உன்னை வைப்பேன்..
என் கிழக்கும் மெல்ல விடிந்து விடும்..

No comments:

Post a Comment