
என் விழிகளில் கோலமிட்டாய்..
ஒரு நொடி நான் நிதானிக்குமுன்
என் மனதுக்குள் தாளமிட்டாய்...
என் நேரம் மொத்தமும் நீயே நிரம்பியிருக்கிறாய்..
உன் நேரம் கொஞ்சம் இரவல் தர மறுக்கிறாய்..
எங்கே போனாய் நெடுந்தூரமாய்..
உனக்காய் காத்திருக்கேன் வெகுநேரமாய்..
இடம் கொடு இடம் கொடு உயிரில்..
வழி விடு வழி விடு உணர்வில்..
போராட்டம் போராட்டம் மனதோடு..
தேரோட்டம் தேரோட்டம் நினைவோடு..
அழைக்கிறேன் அருகே வா..
பிழைக்கிறேன் உறவே வா..
நீ எதுவும் செய்ய தடை இல்லை...
நீ எது சொன்ன போதும் பிழை இல்லை...
எனக்குள் வருவாயா? எனையே தருவாயா?
No comments:
Post a Comment