Sunday, December 27, 2009

19.நீ.. நான் ..


நீ நீர் ..
நான் நெருப்பு ..
நெருப்பு நீராகி
நீர் பற்றியது..

நீ பசி
நான் இரை
இரை தின்று தீர்க்கிறது
பசியை


நீ இரவு
நான் நிலவு
நிலவென்னை ஒளியுணரச்
செய்தாய்..

நீ கவிதை
நான் கற்பனை
என்னை எண்ணுகையில்
உன் கவிதைக்குள்
ஒளிந்து கொள்வேன்..

நீ மொழி
நான் மௌனம்
உன் மொழியை விட
உரத்து பேசுகிறது
என் மௌனம்..

நீ காற்றாட்டு வெள்ளம்
நான் நாணல்
அடித்துச் செல்லவோ
அரித்துப் போகவோ இயலாது..
அனைத்துச் செல்வதை தவிர..

No comments:

Post a Comment