Thursday, December 24, 2009

15. தோள் சாய

நீ நான் காணும் அழகிலேல்லாம் அழகு..
என் மேகமே என்னில் துளியாகி விலகு..

என் செய்ய என் செய்ய
எல்லாம் உன்னில் பிடிக்கிறதே..

தோள் சாய தோள் சாய
என் மனம் ஏங்கித் தவிக்குதே..


அவ்வளவு தாகம் உள்ளே இருக்கு
அனைத்திற்கும் காரணம் உன்மேல் கிறுக்கு

என் வேகம் குறைத்து சீராக்கினாய்
உள் நெருப்பை மறைத்து நீராக்கினாய்..

தயங்கி தயங்கி தள்ளிப் போகிறாய்..
மயங்கி மயங்கி மடி சாய்கிறேன்..

என் உயிரின் இன்னொரு சுவாசமே..
என் அணுக்கள் ஒவ்வொன்றும் உனையே பேசுமே..

பனித்துளி பட்டே பற்றி எரிகிறேன்..
மணித்துளி மொத்தம் உனக்கு தருகிறேன்..

காத்திருக்கிறேன் உன் அணைப்பில் உறங்க..
பூத்திருக்கிறேன் உன் விழியில் கிறங்க..

No comments:

Post a Comment