Thursday, December 24, 2009

17. கட்டளை

சொல் சொல் என்னிடம் சொல்
உனக்கும் என்னை பிடிக்கிறதா?

செல் செல் உன்னிடம் செல்
என்றே கவிதை அனுப்புகிறேன்..

நில் நில் எனக்குள்ளே நில்
என்றே கட்டளை செய்கின்றேன்..

பெய் பெய் மழையே பெய் 
எனக்கும் அவனுக்கும் இடையே பெய்..

வை வை இதயத்தில் வை
உனக்கென கிடைத்த ஒரு பூவை..

செய் செய் சொல்வதை செய்
மறுதலிக்காமல் யாவும் செய்..

No comments:

Post a Comment