அந்தி மலரின் மனம் கொண்டவனே
அதிகாலை நிலவின் ஒளி கொண்டவனே..
என் இரவுகள் விழித்திருக்கும் உனக்காக
என் இதயம் விரித்திருப்பேன் உனக்காக
ஏன் விழிக்குள் வந்து வேர் விட்டாய்?
ஏன் மடியில் ஒளிந்து தேர் விட்டாய்?
ஏன் என்னை இரவில் தொடர்கிறாய்?
நீயே வந்து என்னில் படர்கிறாய்?
தப்பித்துப் போனவனே மீண்டும்
ஏன் சிறைபட வந்தாய்?
ஒப்பித்துச் சொன்னவனே மீண்டும்
ஏன் கரைதொட வந்தாய்?
எனக்கென கிடைத்த அதிசயமே..
நான் ஜீவிக்க நீ அவசியமே..
No comments:
Post a Comment