Monday, December 14, 2009

11.ஒரு வகை போதை

இந்த இரவு அந்த நிலவு
இங்கு நான் அங்கு நீ
இயற்கையும் இதயமும்
இயல்பாய் இணையும் நேரமிது..
ஒரு வகை போதை இது..

உன் மணம் முழுதாய் அறிந்ததில்லை..
உன் மணமின்றி என் எழுத்து பிறப்பதில்லை..

இந்த  இரவினில் புதுமையில்லை..
உன் வரவின்றி எதுவுமில்லை..
 
முல்லை வரப்பினில் நின்றிருப்பேன்..
என் நேசத்தை வென்றெடுப்பேன்..

என் இரவுகள் ஒளிரச் செய்தாய்..
என் பெண்மை மலரச் செய்தாய்..

இறந்தேன் என்னை உயிராக்கினாய்..
பிறந்தேன் என்னில் உயிராகினாய்..

No comments:

Post a Comment