Friday, December 18, 2009

14.உறங்கா விழி

என்ன செய்கிறாய்? என் நினைவே
உன் மனம் தொட வில்லையா என் குரலே?

உன் நினைவுகளில் நான் மூழ்கியிருக்கிறேன்..
உன் கவனம் இரவல் தர மறுப்பதேன்?

உன் வேலையில் என் வரவு தடங்கலா?
உன் கவனத்தில் என் உறவு இடைஞ்சலா?

உன் விழிக்குள் துயில் நுழைந்ததோ?
அதன் விளைவால் பதில் வராமல் நின்றதோ?

உறங்கா  விழிகளுடன் உன்னருகில் நானிருக்க
தூக்கத்தை துணைக்கழைத்து எங்குதான் சென்றாயோ?

நீ பதிலோடு நடை பயின்றாய்..
நான் கேள்வியோடு எடையிழந்தேன்..

இரவில் செறிவு வருவது உன்னால்..
இரு தனிமம் சேர்மமாவது என்னாள்?

No comments:

Post a Comment