Monday, December 28, 2009

21.நான்.. நீ

நீ வாசகன்
நான் புத்தகம்
நீ வாசிக்க வாசிக்க
இன்னுமாய் செறிவடைகிறேன்..

நீ வல்லினம்
நான் மெல்லினம்
வன்மையும் மென்மையும் இல்லாமல்
இடையினமாய் நீடிக்கிறது இந்த உறவு..

நீ தோப்பு
நான் தனிமரம்
நான் என்னாவேன்
நீயே சொல்..

நீ இமை
நான் விழி
தழுவாத நேரங்களில்
அழுதழுது துடிக்கிறேன்..

நீ இதயம்
நான் துடிப்பு..
நான் துடிப்பதால்தான்
நீ உணரப்படுகிறாயா?
நீ இருப்பதால் தான்
துடிக்கிறேன் நான்..


நீ சிறிய முள்
நான் பெரிய முள்
உன்னை நிமிடத்திற்கொருமுறை
சுற்றி வருகிறேன்..

No comments:

Post a Comment