
என் ஜீவன் துள்ளுது தன்னாலே..
புது புது கவிதைகள் படைக்கச் செய்தாய்..
புதிதாய் தினம் என்னை பிறக்கச் செய்தாய்..
இரவோடும் பகலோடும் என்னைக் கொன்றாய்..
இமையோடும் இதழோடும் என்னைத் தின்றாய்..
அடங்காத பெண்ணாக சுற்றி வந்தேன்-நீ எதிர்ப்பட
தடுமாறி உன் கரம் பற்றி நின்றேன்..
நீ அடைகாக்கும் தருணத்திற்காய் காத்திருப்பேன்..
என் ஆசைகளை ஒவ்வொன்றாய் வார்த்திருப்பேன்..
என் கண்ணீர் துளிகள் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...
உன் சிரிப்பினில் என் சோகம் மறந்திருப்பேன்..
உன் வருகைக்கு புது கீதம் இசைத்திருப்பேன்..
உன்னை ஒருநொடி கூட தொலைக்க மாட்டேன்-அது
நிகழ்ந்தால் மறுநொடி மண்ணில் நிலைக்கமாட்டேன்..
No comments:
Post a Comment