Thursday, July 8, 2010

61.என் ஆசை

நீ காதல் சொன்னால்
என் ஆயுள் கூடி விடும்
நீ மௌனம் சொன்னால்
எனை மரணம் தேடி வரும்
உன் பார்வை பட்டால்
எனை நாணம் மூடி விடும்
உன் கைகள் தொட்டால்
என் உயிரில் பூ வெடிக்கும்

உன் அருகில் நடந்தால்
என் நிழலுக்கும் உயிர் பிறக்கும்
உன் வார்த்தை தந்தால்
என் நினைவில் மழை பிறக்கும்
நீ கவிதை சொன்னால்
என் நேரம் தவமிருக்கும்
நீ சிரித்து கொண்டால்
என் காயம் மறைந்திருக்கும்

என் இரவு தோறும்
உன் உறவில் பலமாகும்
என் கனவு தோறும்
உன் வருகையில் அழகாகும்
என் விடியல் தோறும்
உன் மடியில் உருவாகும்
என் விழிகள் தோறும்
உன் முத்தத்தில் ஒளியாகும்

உன் இமைகள் தவித்தால்
என்ன் இதயம் தவிடாகும்
உன் இளமை பசித்தால்
என் இளமை உணவாகும்
உன் ஆசை எல்லாம்
என் ஆசை என்றாகும்
உன் தேவை எல்லாம்
என் தேவை எனமாறும்

No comments:

Post a Comment