Wednesday, July 14, 2010

67.அன்பே என்னை நீங்காதிரு


அழகே ஆதரி
ஆகவே காதலி
அன்பே வேரடி
ஆயுளே நீயடி

கனவில் உலவிச் செல்ல
கண்கள் மூடிக் கிடந்தேன்
கண்ணில் முத்தமிட்டு
கனவை நேரில் செய்தாய்

பூக்கள் கிள்ள வந்தாய்
வேரில் நீரைக் கசிந்தேன்
வேரில் நீர் பொழிந்து
பூக்கள் மலரச் செய்தாய்

அன்பே என்னை நீங்காதிரு
இரவே இன்னும் ஓயாதிரு

உறக்கம் தொலைத்தோம்
உயிரில் கலந்தோம்
தேனோடு தீயைத் தீண்டினோம்

நெருக்கம் அதிகரிக்க
காற்றும்  மூச்சுத் திணற
காதல் அதிகரிக்க
காமம் மூச்சுத் திணற

வியர்வை வழிய உந்தன்
விரல்கள் உறிஞ்சுகிறதே
விரல்கள் ஊற இன்னும்
வேகம் கூடுகிறதே

அழகே உன்னால் நான் வாழ்கிறேன்
அசலே உன்னால் நான் சாகிறேன்

உயிரைத் தரவா?
உடலாய் வரவா?
ஒன்றோடு ஒன்று சேரவா.

No comments:

Post a Comment