Tuesday, July 13, 2010

64.துளியாய் விழு

கனவெல்லாம் நீயாய் மாறி
கொன்றாய் என்னை
நினவெல்லாம் நீயாய் மாறி
தின்றாய் என்னை

வாவென்று சொல்லிய போது
மறுக்காமல் வந்தாயே
தாவென்று சொல்லிய பின்னும்
தயங்கித்தான் நின்றாயே

ஒரு வார்த்தையில் என்னுயிரில்
தீயை வைக்கிறாய்
ஒரு பார்வையில் எனக்குள்ளே
துளியாய் விழுகிறாய்

நட்பிங்கே காதலாய் மாறும்
கதைகள் கேட்டோமோ
காதலிங்கே நட்பாய் மாறும்
விசித்திரம் சொன்னாயே

நட்பென்றால் நிறைவேறாத
காதல் என்பதுதான்
காதலென்றால் வாழ்க்கை முழுதும்
தொடரும் நட்பேதான்

இரண்டுமே இங்கு வேண்டுமே
இதயமே பொங்கி அரற்றுமே
என்ன சொல்லியும் சிறு குழந்தையாய்
நான் புரண்டே அழுதேன்..

இதுவரைக்கும் பேசிய வார்த்தைகள்
இதயத்தில் சேமித்தேன்
இனிமேல் நீ பேசும் வார்த்கைள்
எங்கே சேகரிப்பேன்?

இதயமே இல்லா உனக்காய்
கண்ணீர் சிந்துகிறேன்
இரண்டிதயம் படைத்திருந்தால்
ஒன்றை உனக்கே தந்திருப்பேன்

இரு இதயத்தால் வந்த தொல்லையா?
உன் இதயத்தில் காதல் இல்லையா?

நான் துடிப்பதும்
பின்பு வெடிப்பதும்
இங்கு உன்னால் தானே

No comments:

Post a Comment