Tuesday, July 13, 2010

66.என்னாளுமே உன்னோடு

என் கவிதையின் வார்த்தைக்குள்
வசிப்பவன் நீயல்லவா
என் வார்த்தையின் பொருளை
ரசிப்பவன் நீயல்லவா

உன் ரசனைகள் அனைத்திற்கும்
ரசிகை நானல்லவா
உன் ராகங்கள் பிறக்கையில்
மலருது பூவல்லவா

நினைவோடு இதம் சேர்த்து
நிறைத்தாயே இதம் கோர்த்து
வாழ வா

கொண்டாடுதே கொண்டாடுதே
உன் ஜீவனும் என் ஜீவனும்
திண்டாடுதே திண்டாடுதே
உன் ஆண்மையும் என் பெண்மையும்

செல்ல செல்ல புது வழியுண்டு
அதைக் கண்டு பிடிப்பாய்
மெல்ல மெல்ல என் நாணத்தை
கூண்டில் சிறை வைப்பாய்

உன் விரல் ஊறும் தேகத்தில்
என் உயிரும் உருகும் மோகத்தில்

என் காதலே என் காதலே
என் பெண்மைக்குள் ஏதோ செய்தாய்
என்னாளுமே உன்னோடுதான்
உன் ஆண்மைக்குள் என் ராகம் தான்

சின்ன சின்ன உன் முத்தத்தாலே
என் கன்னங்கள் சிவக்கும்
கண்கள் மூடி நான் சரிகையில்
உன் கைகளும் தாங்கும்

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழவே
உயில் எழுதி இன்றே தருகிறேன்

No comments:

Post a Comment