Thursday, July 22, 2010

71.விழியே விளக்காகும்


கனவினில் கனவினில் நுழைந்து விட்டாய்
கவிதைகள் வாசித்து எழுப்பி விட்டாய்
விலகிட விலகிட அருகில் வந்தாய்
பழகிட பழகிட அழகைத் தந்தாய்

முதல் நாளில் உன் பார்வைக்குள்
ஒரு பதியம் செய்திட்டாய்
மறுநாளில் உன் வார்த்தைக்குள்
ஒரு வசியம் வைத்திட்டாய்

இரவினில் தினம் பேசுகிறாய்
இமைகளை நினறு வாசிக்கிறாய்
இதயத்தில் அனல் வீசுகிறாய்
இருந்துமே உண்மை மறைத்துக் கொன்றாய்

ஏனடா அட ஏனடா
உருகுதே என் உயிரடா
ஒரு வார்த்தை சொன்னால்
எந்தன் வாழ்வு இன்னும் நீளாதோ
மறு வார்த்தை பேசாமல் சென்றால்
என்னை மரணம் தீண்டாதோ

காலையில் நான் எழும் போது
ஒரு முத்தம் நீ தருவாயோ
மாலையில் வீடு திரும்புகையில்
மறைந்தே கட்டிக் கொள்வாயோ

ஆயிரம் என் ஆசைகள்
ஆயினும் சொல்ல மறுக்கிறேன்
உண்மை சொல்லாத போதும் எந்தன்
உயிரும் உனக்காகும்..
இருளும் சூழ்கின்ற போது உந்தன்
விழியே விளக்காகும்.

No comments:

Post a Comment