Friday, July 9, 2010

63.ஆயுள் வரை


அழகே அறிவே அன்பே அகிலே
என்னைத் துளைத்துப் போனாயடா..
மழையே பிறையே நதியே கடலே
என்னை நனைக்க வந்தாயடா..

ஏனோ உன் மௌனம் மட்டும்
கரையை அரிக்குதடா
மனம் நுரையாய் பறக்குதடா

ஏதோ ஒரு ஈர்ப்பில் எந்தன்
உயிரும் திரிகிறதே
நினைவும் சரிகிறதே
இன்னும் என் செய்வாய்?

அலையும் இழுத்துச் சென்றதன் பின்னே
மூழ்கி முத்தெனெ எடுப்பாயா?
வலையும் இல்லை மூடியும் இல்லை
காற்றைத் தடுப்பாயா?

உனக்குள்ளே வசீகரம் ஏதோ இருக்கு
எனக்குள்ளே அது வந்து செய்யும் கிறுக்கு
வெண்ணிலவின் ஒளியில் புன்னகை செய்து
வெடுக்கென நெஞ்சில் கலகம் செய்து
பார்த்துக் கொண்டே இருக்கும் போதே
பார்வை பறித்தாயே
வேர்த்து நானும் கிடக்கும் போது
தாகம் தீர்த்தாயே
எதைத் தருவேன்? எதைத் தருவேன்?
உனக்கென பரிசாய் எதைத் தருவேன்?
என்னைத் தருவேன் என்னைத் தருவேன்
ஆயுள் வரை எந்தன் அன்பைத் தருவேன்..

No comments:

Post a Comment